Friday, November 14, 2008

ஒரு நச் கவிதையும், கொலைமிரட்டலும்

ஜமீனுடனான தனது அனுபவங்கள் பற்றி Mr.யூ.கே சொல்வது:

காலேஜ் சேர்ந்து முதல்வருடம் விடுமுறையில் நல்லா வெட்டியா சுத்திட்டு இரண்டாமாண்டில் காலெடுத்து வைத்தோம். அப்போது எங்களுக்கு தெரியாது. இனிமேல் நாங்கள் இப்படியொரு அற்புத(ப)மான ஜீவனுடன் மீதி காலத்தை ஓட்ட வேண்டுமென்று. அது வேறு யாருமில்லை எங்க தலை ஜமீன்தான். தலையைப் பத்திச் சொல்லணும்னா ஸ்கூல்பையன் மாதிரி ஒரு தோற்றம். பால்வடியும் முகம். ஆனால் அது பால்வடியும் முகமில்லை.. ஜிங்காரோ பீர் வடியும் முகம்னு போகப்போகத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். அந்த முகத்துக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல் ஒரு கட்டை மீசைன்னு அம்சமா இருப்பார்னா பார்த்துக்கங்களேன்..

ஜமீனை முதன்முதலில் பார்த்த நம்ம காலேஜ் கவிஞர் தனக்கு தோன்றிய அந்த அற்புத வரிகளை கவிதையாக கொட்டியிருக்கார்.அவரது அனுமதியுடன் அந்த அற்புதமான கவிதை உங்கள் பார்வைக்கு..

ஒரு
கிங்ஸ்
கிங்ஸ்
புகைக்கிறதே....

- எழுச்சி கவிஞர் ஏழரையடி ஏகாம்பரம்

நம்ம கவிஞர் ஏழரையடி ஏகாம்பரம் சொன்னதுபோல் இப்படிதான் முதன்முதலில் காட்சியளித்தார் நம்ம தலை ஜமீன். முதலில் பார்த்ததும் சரி.. ஏதோ ஒரு ஸ்டூடண்டின் தம்பி போல...அதான் ஹாஸ்டல் ரூமில் உட்கார்ந்திருக்கான்னு நினைச்சேன்.ஆனால் அப்புறம்தான் தெரிஞ்சது.. அவர்தான் நம்ம தலை ஜமீன் அப்படிங்கறதும், எங்க எல்லோரையும் விட ரொம்ப உயர்ந்தவர்(வயசுல மட்டும்) அப்படிங்கறதும். வேற வழியில்லாமல் தலையை எங்கள் நண்பர் குழுவில் இணைச்சுக்கிட்டோ ம்.ஸாரி.. ஸாரி.. ரொம்ப பெரிய மனசு பண்ணி ஜமீன்தான் எங்களை அவரோட நண்பர்களா ஏத்துக்கிட்டார்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

ஜமீனுடனான இவ்வளவு கேவலமான அறிமுகத்துக்கு அப்புறம் அவருடன் தொடர்ந்து நடந்த,நடக்கும் இனிமையான நிகழ்வுகளை(கருமம்டா சாமி...) இனிவரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.

ஜமீனுடனான தனது அனுபவங்கள் பற்றி Mr.கே.கே சொல்வது:

நம்ம யூ.கே சொன்ன மாதிரிதான் எனக்கும் ஜமீனுடனான முதல் சந்திப்பும். பார்ப்பதற்கு ஸ்கூல்பையன் மாதிரி ஒரு தோற்றம். ஆனால் அந்த முகத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத ம.பொ.சி மீசை என பெரும் காமெடியனாய் காட்சியளித்தார்.

நம்ம தலை ஜமீன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா யாரையும் சந்தித்த அடுத்தநொடியே அவர்களுக்கு மாமா,மச்சி என அன்புடன் உறவுமுறை வைத்துக் கூப்பிடுவது.

காலேஜில் அவரது உயிர் நண்பர் ஏழரையடி ஏகாம்பரத்துடன், நாலரையடி ஜமீன் இனைந்து கூச்சப்படாமல் (ரொம்பவே கஷ்டப்பட்டு) அவரின் தோளில் கையைப் போட்டவாறு தம் அடிக்க செல்லும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.

ஜமீனிடம் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா அவரோட ஆளுமைத்திறன். அது எப்படின்னா ஹாஸ்டல்ல இருந்து 4பேர் சேர்ந்து கடைக்கு போனாங்கன்னா கூட சேர்ந்துக்குவார். அங்கே கடையில் நாட்டாமை ரேஞ்சுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களை பார்த்து ஒரு அதிகார தோரணையோடு இரு விரல்களை V வடிவில் சமிக்ஞை செய்து தம்மை வாங்கிக்கொண்டு வந்து கையிலே தரச்சொல்வார். ஆனால் நமது நண்பர்களோ ஏதும் அறியாதவர்கள் போல் வந்த வேலையைக் கவனிக்க, கடைசியில் நம்ம தலை "பொல்லாதவன்" கருணாஸ் ரேஞ்சுக்கு "ஏ நீ வாங்கேன்..ஏ நீ வாங்கேன்.." என்று கெஞ்சியும் கூட ஒன்றும் நடக்காததால் கடைசியில் தானே வாங்கி அடித்தாலும் கூட கடைசி வரைக்கும் தனக்கே உரிய கெத்தை விட்டுத்தராமல் புண்பட்ட நெஞ்சை சூனாப்பானா வடிவேல் ரேஞ்சுக்கு புகையைவிட்டு ஆத்துவார்.

(இதோ இப்போது இந்தப் பதிவை டைப் செய்துக் கொண்டிருக்கும்போது கூட மர்ம நபர் ஒருவர் இதுவரை வெளியான பதிவுகளை நீக்குமாறும், இனியும் பதிவுகளைத் தொடராமல் இருக்கும்படியும் மீறினால் கூலிப்படையை ஏவி தாக்கப் போவதாகவும் சற்று முன்னர்தான் டெலிபோனில் கொலைவெறியுடன் பேசினார். ஆனால் பாவம் அந்த முகம் தெரியாத நண்பருக்கு தனது மிரட்டல் உரையாடல முழுவதும் பதிவு செய்யப்படும் என தெரிய வாய்ப்பில்லை. வலைப்பூ நண்பர்களுக்காக அந்த டெலிபோன் உரையாடல் இதோ முழுமையாக.)


Mr.கே.கே: ஹலோ.....
ம.நபர் : நான் யாருங்கறது இருக்கட்டும்.. ஏதோ பிளாக்கெல்லாம் எழுதறீங்களாமே?

Mr.கே.கே: என்ன பிளாக்குங்ண்ணா.. புரியலையே..

ம.நபர்: ஏ ******* ஜிங்காரோங்கற பேருல ஏதோ எழுதறியாமே?

Mr.கே.கே: ஜிங்காரோவா? என்ன சொல்றீங்க? சத்தியமா புரியலை..

ம.நபர்: எல்லாம் எனக்கு தெரியும் தம்பி.. சொல்லவேண்டியவங்க சொன்னாங்க..

Mr.கே.கே: யாருண்ணா? என்ன சொன்னாங்க?

ம.நபர்: கடைசியா நான் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன். மவனே ஜிங்காரோ ஜமீன்ங்கற பேருல ஏதாவது எழுதுனீங்கண்ணு தெரிஞ்சது தொரத்தி தொரத்தி அடிப்பேன். மீறி எழுதுனேன்னா அடுத்த பதிவுபோட அந்த கை இருக்காது தெரிஞ்சுக்கோ.. டேய் ** இன்னொருத்தன் இருப்பானே? போனை அவன்கிட்ட குடுடா..

(Mr.கே.கே சற்றே உதறலெடுத்தாலும் கூட சமாளித்து பேசியபடி Mr.யூ.கே விடம் போனை தருகிறார்.Mr.யூ.கேவுக்கும் உள்ளுக்குள் உதறலெடுத்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசுகிறார்)

ம.நபர்: என்னடா ஏதோ பிளாக்கெல்லாம் எழுதறீங்களாமே?

Mr.யூ.கே: பிளாக்குன்னா என்னங்ண்ணா? சத்தியமா எனக்கு தெரியலை.. முதல்ல பிளாக்குன்னா என்னன்னு சொல்லுங்க.. மேற்கொண்டு பேசுவோம்.
( இதை கேட்டவுடன் சட்டென்று அமைதியான எதிர்முனை அப்படியே உரையாடலை துண்டிக்கிறது)

இருந்தபோதும் நாங்கள் ஆரம்பத்திலேயே கூறியபடி அஞ்சாநெஞ்சன்களான இந்த வெட்டிப்பசங்க எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம் என கூறிக்கொள்கிறோம்


பின்குறிப்பு: மேற்கண்ட கொலைமிரட்டல் குறித்து மற்ற நண்பர்களுடன் விவாதித்து எடுக்கப்படும் முடிவு இதோ...


வலைப்பதிவர்களான நண்பர்கள் மூவரும் கூடியிருக்க, போனில் வந்த கொலைமிரட்டல் குறித்து விவாதம் ஆரம்பிக்கிறது.


Mr.கே.கே: நம்ம எதிர்பார்த்த மாதிரியே எதிர்ப்புகள் வர ஆரம்பிச்சுடுச்சு.. அதைப்பற்றி பேசத்தான் இந்த அவசரக்கூட்டம்
Mr.யூ.கே: ஆமாம். கே.கே வுக்கு வந்த அந்த போன்காலை நானும் அட்டெண்ட் செய்தேன்.கொஞ்சம் கடுமையாகத்தான் பேசினான் அந்த மர்ம நபர்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன சொல்றீங்க.. பெயரைக்கூட சொல்லாமல் மிரட்டிய அவனுக்குப் போய் பயந்துக்கிட்டு நிறுத்திடலாம்கிறீங்களா?
Mr.கே.கே: இல்லை.. அப்படி சொல்லலை. இதுவரை வந்த பதிவுகளுக்கு இந்த மிரட்டல் கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது.
Mr.என்.எஸ்: கே.கே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்க.. இதுவரைக்கும் வெளியாகியிருக்கும் பதிவுகளில் நீயும்,யூ.கே வும் சும்மா பிள்ளையார் சுழிதான் போட்டிருக்கீங்க.. அப்படி ஒண்ணும் பெருசா ஏதும் எழுதிடலை. இதுக்கே இப்படி யோசிச்சிங்கன்னா எப்படி? எதுக்கு சொல்றேன்னா நான் களத்தில் இறங்கி பதிவுமட்டும் போட்டேன்னா பிளாக்ஸ்பாட்டே சும்மா அதிரும் தெரிஞ்சுக்கங்க.. நமக்கு இந்த செண்டிமெண்ட் எல்லாம் ஒத்துவராது.நடந்ததையெல்லாம் புட்டுபுட்டு வைப்பேன் தெரியுமில்ல..
Mr.யூ.கே: இல்லை. இப்படியெல்லாம் நடக்கும்னு எதிபார்த்ததுதான். இருந்தாலும்..
(என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போதே மொபைல் ஒலிக்க லைனில் வருகிறார் பருத்திவீரன் சித்தப்பூ.விஷயத்தை சொல்லி ஸ்பீக்கர் போனை ஆன் செய்து மேஜையில் வைத்தவுடன் வைப்ரேட் மோடில் வைக்காமலேயே போன் அதிர ஆரம்பிக்கிறது. அந்தளவுக்கு சித்தப்பூ டென்ஷனில் எகிறுகிறார்)
சித்தப்பூ(போனில்): ஏண்டா எவனோ ஒரு பன்னாடைப் பய ஏதோ பேசினான்னு பதிவு போடறதை விட்டுட்டு, இப்படி மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கீங்களே? வெட்கமாயில்லை உங்களுக்கெல்லாம்?
Mr.கே.கே: அதில்லை சித்தப்பூ.. அவன் பேசின தோரணையை பார்த்தா கொஞ்சம் உதறலாகத்தான் இருக்கு.. அதான்...
சித்தப்பூ(போனில்): டேய் அந்த ** எங்கயாவது 1 ரூபாய் செல்லாத காசை கீழே கண்டெடுத்து இருப்பான்.அதுக்கு பீடி கூட வாங்க முடியலையேங்கற கடுப்பில பப்ளிக் பூத்துலேயிருந்து போனை போட்டு ஒரு அல்ப ஆசைக்கு பேசியிருப்பான்.அதைப்போய் ஒரு விஷயம்னு உட்கார்ந்து பேசறீங்களேடா.. அதுவுமில்லாமல் யூ.கே. சொன்னதை வைச்சுப் பார்த்தா அந்த **க்கு பிளாக்குன்னா என்னான்னே தெரியலை.. இதுகூட தெரியாத ** பேசினான்னு பொழப்பை விட்டுட்டு மீட்டிங்காம் மீட்டிங்கு.. ஆகற வேலையைப் பாருங்கடா.. அவன் 1 ரூபாய்க்கு பேசினான்னு என்னை 20 ரூபாய்க்கு எஸ்.டி.டி போட வைச்சுட்டீங்களேடா.இனிமேல் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு போனைப் போட்டீங்க தொலைச்சிடுவேன்.. தெரிஞ்சுக்கங்க.. என்ன செய்விங்களோ எனக்கு தெரியாது.இனிமேல் தினமும் ரெண்டு பதிப்பு போட்டே ஆகணும் ஞாபகம் வைச்சுக்கங்க.. என்றபடியே லைனை கட் செய்கிறார்.
Mr.என்.எஸ்: அப்போ என்ன செய்யலாம்?
Mr.கே.கே: அதான் சித்தப்பூவே சொல்லிட்டாருல்ல.. வழக்கம்போல நம்ம வேலையை தொடர வேண்டியதுதான்..
Mr.யூ.கே: சரி.. நம்ம பசங்கதானே.. கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்னு பார்த்தால் விட மாட்டேங்குறானுங்க. நாளையிலிருந்து புது வேகத்தோடு களமிறங்கி பரபரப்பான பதிவுகளை போடணும்.. ஓ.கே..
Mr.கே.கே வும் என்.எஸ் ஸீம் ஒருமித்த குரலில் ஓ.கே என்றுசொல்ல மீட்டிங் இனிதே முடிவடைகிறது.

1 comment:

SK said...

கரெக்ட் நம்ம சித்தப்பு சொன்ன மாதிரி தினம் ரெண்டு பதிவாவது podanum.
அப்புறம் எதுக்கு நாங்க எல்லாம் இப்படி தேவுடு காத்துட்டு உக்காந்து இருக்கோம் ஜமின் .....................