Saturday, October 18, 2008

அதிஷாவுக்கு வலைப்பதிவர்கள் சார்பாக ஒரு கண்டன அறிக்கை

அதிஷா அண்ணாச்சியை பத்தி அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு அதிஷா இப்போ கலக்கிக்கிட்டு இருக்காரு.

ஜிங்காரோ ஜமீன் அப்படிங்கற பெயரில் நானும் மொக்கை பதிவுகளாக போட்டு ஒரு வலைப்பதிவு வைத்திருந்த ஒரே காரணத்தால் நானும் ரவுடிதான் என வடிவேலு போலீஸ் ஜீப்பில் ஏறுவதுபோல் நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் என ஒவ்வொரு பதிவர் சந்திப்பிற்கும் தவறாமல் ஆஜராகிவந்தேன்.

இந்த நேரத்தில்தான் அதிஷா அண்ணாச்சி நம்மைப்பத்தி இப்படி ஒரு பதிவுல சொல்லியிருந்தாரு.


ஜிங்காரோ ஜமீன் :

பதிவர் ஜிங்காரோ ஜமீன் , பல பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் . பதிவுகள் மட்டும் எழுதமாட்டார் . கும்மி மக்களோடு சந்திப்பு முழுதும் ஐக்கியாமாகியிருந்தார் . அவரோடு அளவளாவ அத்துனை வாய்ப்பு கிட்டவில்லை . கிட்டியிருந்தால் கலாய்த்து மகிழ்ந்திருப்பேன்.


அதிஷா அண்ணாச்சி பதிவர் சந்திப்பு பற்றி எழுதிய இந்த பதிவில் இப்படியெல்லாம் என்னை அளவுக்கு அதிகமாகவே புகழ்ந்து, பாராட்டி, வாழ்த்தி எப்படி வேணும்னாலும் வைச்சுக்குங்க. மொத்தத்தில் செம உள்குத்து குத்திட்டாருங்க.


அதனால் எனக்கும் இப்ப வேற வழியே தெரியலைங்க...

ஆமாங்க..... அதாங்க.... அதேதாங்க... அட ஆமாங்கறேன்..

மறுபடியும் எழுதறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.


தலைப்பு சம்பந்தமிலாமல் இருக்கேன்னு பார்க்கறிங்களா? இதோ மேட்டரை சேர்த்தால் போச்சு.


அதிஷாவுக்கு வலைபதிவர்கள் சார்பாக ஒரு கண்டன அறிக்கை:


ஜிங்காரோ ஜமீனின் மரண மொக்கைகளை இவ்வளவு நாளாக காணாமல் சற்றே நிம்மதியாயிருந்தது பொறுக்காமல் மீண்டும் ஜிங்காரோவை தூண்டிவிட்ட அதிஷாவுக்கு வலைப்பதிவர்கள் சார்பாகவும், தமிழ்மணத்தின் சார்பாகவும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.


கடைசியா ஒண்ணே ஒண்ணு மக்கா..... இனிமேல் அடிக்கடி பதிவு என்ற பெயரில் வரப்போகும் கொடுமைகளை தாங்க தயாராக இருக்கவும்.


அம்புட்டுதேன்..  மீண்டும் சந்திப்போம்.